/indian-express-tamil/media/media_files/2025/10/03/aadhav-arjuna-hc-2025-10-03-17-35-58.jpg)
கரூர் சம்பவம் தொடர்பாக சமூக ஊடகங்களில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்துப் பதிவிட்டதாகத் தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி, ஆதவ் அர்ஜுனா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கில், காவல்துறை நடவடிக்கை அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டது என்றும், அடிப்படை முகாந்திரம் அற்றது என்றும் அவர் தனது மனுவில் சுட்டிக் காட்டியுள்ளார். தான் பதிவிட்ட சர்ச்சைக்குரிய பதிவை உடனடியாக 'என் எக்ஸ்' (X) தளத்தில் இருந்து நீக்கிவிட்டதாகவும், அந்தப் பதிவை இட்டதில் தனக்கு எந்தவித உள்நோக்கமும் இல்லை என்றும் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
தன் மீது தொடுக்கப்பட்ட வழக்கு, எந்த ஒரு அடிப்படை முகாந்திரமும் இல்லாமல் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், புகாரைப் பற்றி காவல்துறை முழுமையாகக் கவனம் செலுத்தவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். "ஆளும் ஆட்சியை விமர்சிப்பது கிரிமினல் குற்றத்திற்குச் சமமானதல்ல" என்று தனது மனுவில் வலியுறுத்தியுள்ள ஆதவ் அர்ஜுனா, தன் மீதான வழக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஆளும் கட்சிக்கு எதிராகக் கருத்து தெரிவித்ததால் மட்டுமே இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று அவர் வாதிடுகிறார். ஆதவ் அர்ஜுனாவின் இந்த மனு விரைவில் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.