கரூர் 41 பேர் பலி: தனி நபர் ஆணையம், எஸ்.ஐ.டி. விசாரணைகள் நிறுத்தம்- ஆதாரங்களை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு

ஏற்கெனவே தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட தனி நபர் ஆணையம் மற்றும் சென்னை உயர் நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழு (SIT) ஆகிய இரண்டின் செயல்பாடுகளையும் உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.

ஏற்கெனவே தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட தனி நபர் ஆணையம் மற்றும் சென்னை உயர் நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழு (SIT) ஆகிய இரண்டின் செயல்பாடுகளையும் உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.

author-image
abhisudha
New Update
karur

Karur stampede CBI investigation Supreme Court verdict Vijay TVK rally

கரூரில் விஜய்யின் 'தமிழக வெற்றிக் கழகம்' (தவெக) நடத்திய பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் இன்று (அக்டோபர் 13) உத்தரவிட்டுள்ளது. தேசத்தின் மனசாட்சியை உலுக்கிய இந்தச் சம்பவம் நியாயமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணைக்கு தகுதியானது என்று நீதிபதிகள் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.

Advertisment

நீதிபதிகள் ஜே.கே. மகேஸ்வரி மற்றும் என்.வி. அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு, "இந்த விவகாரம் குடிமக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதிக்கிறது. எனவே, இடைக்கால நடவடிக்கையாக விசாரணையை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டியது அவசியம்," என்று கூறி இந்த முக்கிய உத்தரவைப் பிறப்பித்தது.

ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் மேற்பார்வைக் குழு

சிபிஐ விசாரணையை முறையாகக் கண்காணிக்க, ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் மூன்று பேர் கொண்ட மேற்பார்வைக் குழுவையும் உச்ச நீதிமன்றம் அமைத்துள்ளது.

இந்தக் குழுவில் நீதிபதி ரஸ்தோகி தவிர, தமிழகப் பிரிவைச் சேர்ந்த, ஆனால் தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டிராத, ஐ.ஜி. பதவிக்குக் குறையாத இரண்டு மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் உறுப்பினர்களாக இருப்பார்கள். இந்தக் குழுவுக்கு சிபிஐக்கு வழிகாட்டுதல்களை வழங்குவதற்கும், அவர்கள் சேகரித்த ஆதாரங்களை மறுபரிசீலனை செய்வதற்கும் முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. சிபிஐ அதிகாரிகள் தங்கள் விசாரணையின் முன்னேற்றம் குறித்து மாதாந்திர அறிக்கைகளை இந்தக் குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
 
உயர் நீதிமன்றச் செயல்பாட்டில் அதிருப்தி

Advertisment
Advertisements

இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தின் (சென்னை அமர்வு) செயல்பாடுகள் குறித்து உச்ச நீதிமன்றம் கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தியது.

அரசியல் பேரணிகளுக்கான வழிகாட்டும் நெறிமுறைகளை மட்டுமே கோரிய ஒரு மனுவை ஏற்று, காவல்துறை அதிகாரிகளின் சிறப்புக் குழுவை (SIT) அமைக்குமாறு உத்தரவிட்டதற்காக உயர் நீதிமன்றத்தை உச்ச நீதிமன்றம் விமர்சித்தது. மேலும், கரூர் வழக்கு மதுரை அமர்வின் அதிகார வரம்புக்கு உட்பட்டது என்பதால், தலைமை நீதிபதியின் அனுமதி இல்லாமல் சென்னை அமர்வு இந்த வழக்கை ஏற்றிருக்கக் கூடாது என்றும் கூறியது. இது குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு உயர் நீதிமன்றப் பதிவாளருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

முக்கிய நடவடிக்கை: ஏற்கெனவே தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட தனி நபர் ஆணையம் மற்றும் சென்னை உயர் நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழு (SIT) ஆகிய இரண்டின் செயல்பாடுகளையும் உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. இவ்விரு அமைப்புகளும் வழக்கு தொடர்பான FIR நகல்கள், சேகரிக்கப்பட்ட ஆதாரங்கள் உள்ளிட்ட அனைத்தையும் சிபிஐ குழுவிடம் உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து, தமிழக அரசு எட்டு வார கால அவகாசத்திற்குள் இது குறித்த பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிபிஐ விசாரணைக் குழுவுக்கு உரிய தளவாட உதவிகளையும் ஒத்துழைப்பையும் மாநில அரசு வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் பணித்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் கூரிய கேள்விகள்:

விசாரணையின் போது, கரூர் சம்பவத்தின் அனுமதி மற்றும் அடுத்தடுத்த நடவடிக்கைகள் குறித்து உச்ச நீதிமன்ற அமர்வு சரமாரி கேள்விகளை எழுப்பியது:

  • அதிமுகவுக்கு அனுமதி மறுக்கப்பட்ட அதே இடத்தில் தவெக-வுக்கு பேரணி நடத்த அனுமதி வழங்கப்பட்டது ஏன்?
  • 30 முதல் 40 உடல்களின் பிரேதப் பரிசோதனை நள்ளிரவில் எப்படி நடத்தப்பட்டது?
  • அதிகாலை 4 மணிக்கெல்லாம் உடல்கள் எதற்காக அவசரமாகத் தகனம் செய்யப்பட்டன?

போன்ற முக்கியக் கேள்விகளை உச்ச நீதிமன்றம் எழுப்பியது குறிப்பிடத்தக்கது.

Vijay

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: