Advertisment

கொரோனாவுக்கு குஷ்பூ உறவினர் பலி: ரசிகர்கள் இரங்கல்

குஷ்பு தனது ட்விட்டரில், "எனது நெருங்கிய உறவினர் கொரோனா தொற்றுக்கு பலியான சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது" என்று தெரிவித்தார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
கொரோனாவுக்கு குஷ்பூ உறவினர் பலி: ரசிகர்கள் இரங்கல்

இந்தியாவில் கொரோனா ஆபத்தை அதிகம் கண்ட மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. இரண்டு மாதங்களுக்கு முன்பாக, இந்தியாவின் மொத்த கொரோனா பாதிப்பின் ஐந்தில் ஒரு பங்கைக் கொண்டிருந்த மகாராஷ்டிரா, தற்போது மூன்றில் ஒரு பங்கைக் கொண்டுள்ளது. மாநிலத்தின் மொத்த பாதிப்பு 62,000- ஐத் தாண்டியுள்ள நிலையில், உயிரிழப்பு 2,098 - க அதிகரித்துள்ளது.

Advertisment

இந்நிலையில், தென்னிந்தியா நடிகையும், அரசியல் ஆர்வலருமான குஷ்புவின் நெருங்கிய உறவினர் மும்பை பெருநகரில் கொரோனாவுக்கு பலியாகியுள்ளார். இதுகுறித்து குஷ்பு தனது ட்விட்டரில், "எனது நெருங்கிய உறவினர் கொரோனா தொற்றுக்கு பலியான சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது" என்று தெரிவித்தார்.

 

இதனையடுத்து, திரைத்துறையினரும், ரசிகர்களும் குஷ்புவிற்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

 

கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு கொண்ட 193 பேர் உயிர் இழந்துள்ளனர். இது ஒரே நாளில் பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச எண்ணிக்கையாகும். மார்ச் 17 அன்று முதல் மரணத்தை பதிவு செய்த மகாராஷ்டிரா , முதல்,1,000 இறப்புக்கு  59 நாட்கள் எடுத்துக் கொண்டது. இருப்பினும், அடுத்த 1,000 இறப்புகளுக்கு அம்மாநிலம் வெறும் 14 நாட்கள் மட்டுமே எடுத்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Coronavirus Corona Corona Virus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment