Advertisment

கிளாம்பாக்கம் பஸ் நிலையம்: முற்றுப் பெறாத பணிகள்; முடிவு எப்போது?

ரூ.394 கோடி செலவில் 90 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்த பேருந்து முனையம், சென்னையின் தெற்குப் பகுதிகளில் உள்ள மிகப்பெரிய பேருந்து நிலையங்களில் ஒன்றாக இருக்கும்.

author-image
WebDesk
New Update
The reasons behind the delay in the opening of the Kilampakkam bus station have been revealed

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் திறப்பு தள்ளிப்போக காரணங்கள் வெளியாகியுள்ளன.

கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தின் கட்டுமானம், கடந்த ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பெய்த மழையின் போது நிறுத்தப்பட்டது. இதனால் பணி நிலுவையில் உள்ளதால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறப்பதில் தாமதம் ஏற்படுகிறது.

Advertisment

publive-image

ஏற்கனவே சில காலக்கெடுவை தவறவிட்ட இந்த கட்டுமானக் குழு, தெற்கு சென்னையில் உள்ள ஜிஎஸ்டி சாலையில் சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையத்தின் (சிஎம்டிஏ) மூலமாக இந்த பேருந்து முனையத்தை கட்டி வருகின்றனர். சில கட்டுமானப் பணிகள் நிலுவையில் உள்ளதால் திறப்பு விழா தேதி இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை என்றார் அமைச்சர் பி.கே.சேகர்பாபு.

புதிய ஆண்டின் தொடக்கத்தில் பிரதான கட்டிடத்தின் குவிமாடம் கட்டுமானப் பணிகளில் 80% மட்டுமே நிறைவடைந்துள்ளதாக சி.எம்.டி.ஏ., தெரிவிக்கின்றன.

தற்போது குவிமாடப் பணிகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாகவும், இறுதிக்கட்டப் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றும் சிஎம்டிஏ மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ரூ.394 கோடி செலவில் 90 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்த பேருந்து முனையம், சென்னையின் தெற்குப் பகுதிகளில் உள்ள மிகப்பெரிய பேருந்து நிலையங்களில் ஒன்றாக இருக்கும். இது மாநில விரைவு போக்குவரத்து கழகம் மற்றும் பெருநகர போக்குவரத்து கழகம் (எம்டிசி) உட்பட கிட்டத்தட்ட 300 பேருந்துகளுக்கு இடமளிக்க முடியும்.

இங்கு எம்.டி.சி., பேருந்துகளுக்கு தனித்தனி நுழைவு மற்றும் வெளியேறும் இடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. கடைகள் மற்றும் பிற வசதிகள் தவிர 325 வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களுக்கான கார் பார்க்கிங் இடங்களையும் இந்த பேருந்து முனையத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

வண்டலூர் மற்றும் ஊரப்பாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையே அமைந்துள்ள இந்த முனையமானது, பெரும் கூட்டத்தை ஈர்க்கும். எனவே, பேருந்து முனையம் திறக்கப்பட்ட பிறகு எதிர்பார்க்கப்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, ரயில் நிலையத்திற்கும் பேருந்து முனையத்திற்கும் இடையில் மேம்பாலம் அமைக்க சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்துக் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Chennai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment