Advertisment

கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கு...விசாரிக்கப்படும் நபர்களுக்கு அடுத்தடுத்து விபத்து!

காவல்துறை சற்றும் எதிர்பார்க்காத மற்றொரு அதிர்ச்சி சம்பவம் இன்று நிகழ்ந்துள்ளது.

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கு...விசாரிக்கப்படும் நபர்களுக்கு அடுத்தடுத்து விபத்து!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவின் காவலாளி ஓம் பகதூர்(50), கடந்த திங்கட் கிழமையன்று அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுக் கிடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மற்றொரு காவலாளி கிருஷ்ண பகதூர் படுகாயங்களுடன் கிடந்தார். இதையடுத்து, கொலையாளிகளை கண்டுபிடிக்க, ஐந்து டிஎஸ்பிக்கள் தலைமையில் ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இதுவரை, மூன்று பேரை போலீசார் சந்தேக வளையத்திற்குள் கொண்டுவந்து, அவர்களிடம் விசாரணை நடத்தி வந்தனர்.

Advertisment

இந்த படுகொலைச் சம்பவம் நடந்த அன்று பதிவான சிசிடிவி கேமராவை போலீசார் ஆய்வு செய்தபோது, ஜெயலலிதாவிடம் கடந்த 2012-ஆம் ஆண்டு கார் டிரைவராக வேலைப்பார்த்த கனகராஜ் என்பவர் மீது, போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. இதையடுத்து, அவரைத் தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வந்தனர்.

காரில் இறந்துகிடந்த கனகராஜ்:

இந்நிலையில், சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தென்னங்குடிபாளையத்தில் இன்று காலை நடந்த விபத்தில், போலீசாரால் தேடப்பட்டு வந்த ஓட்டுநர் கனகராஜ், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து, உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கனகராஜின் இந்த விபத்து போலீசாருக்கு பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் உண்மையில், விபத்தில் தான் இறந்தாரா அல்லது விபத்து எனும் போர்வையில் கொலை செய்யப்பட்டுள்ளாரா எனும் கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வந்து கொண்டிருந்தனர். இப்போதுதான் காவல்துறை சற்றும் எதிர்பார்க்காத மற்றொரு அதிர்ச்சி சம்பவம் இன்று நிகழ்ந்துள்ளது.

அடுத்த விபத்து:

தந்தி தொலைக்காட்சி தற்போது வெளியிட்டுள்ள செய்திகளின்படி, இறந்துபோன ஓட்டுநர் கனகராஜின் நண்பரும், கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கில் விசாரிக்கப்பட்டு வந்த சயன் என்பவர், இன்று தனது குடும்பத்துடன் பாலக்காட்டில் காரில் சென்றுக் கொண்டிருந்த போது, அவரது கார் விபத்தில் சிக்கியுள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

உடனடியாக, சம்பவ இடத்திற்கு சென்று போலீசார் பார்த்த போது, சயனின் மனைவியும், மகளும் இறந்து கிடந்தனர். படுகாயங்களுடன் இருந்த சயனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

மிரளும் போலீஸ்....

கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கில், காவல்துறையினர் விசாரிக்கும் நபர்கள் இப்படி அடுத்தடுத்து விபத்துக்குள்ளாகியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினருக்கும் சவால்விடும் வழக்காக இது அமைந்துள்ளது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment