Advertisment

ரோந்து பணிக்கு பேட்டரி ஆட்டோ; கோவை போலீசார் புதிய முயற்சி

நாட்டிலேயே முதல் முறையாக, ரோந்து செல்வதற்கு பேட்டரி ஆட்டோக்களை பயன்படுத்தப்படும் கோவை போலீஸ்

author-image
WebDesk
New Update
Kovai battery auto

ரோந்து செல்வதற்கு பேட்டரி ஆட்டோக்களை பயன்படுத்தப்படும் கோவை போலீஸ்

கோவை மாநகர காவல் துறையினர் ரோந்து செல்வதற்கு வசதியாக பேட்டரியில் இயங்கும் 2 ஆட்டோக்கள் வழங்கப்பட்டுள்ளன.

Advertisment

கோவை மாநகர போலீசார் தற்போது ஜீப், கார், பைக் ஆகியவற்றிலும், நடந்தும் ரோந்துப்பணி மேற்கொள்கின்றனர். இப்போது கூடுதலாக இரண்டு பேட்டரி ஆட்டோக்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதையும் படியுங்கள்: 3-வது நாளாக தொடரும் சோதனை: செந்தில் பாலாஜியின் நண்பர் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை

publive-image

ஒரு ஆட்டோ, பயணிகள் ஆட்டோ போன்ற தோற்றத்தில் சிவப்பு வண்ணம் பூசப்பட்டுள்ளது. பொதுமக்களை எச்சரிப்பதற்கு ஒலிபெருக்கியும், சிகப்பு, நீல வண்ண விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளன. போலீசாரின் பல்வேறு பிரிவுகளின் தொடர்பு எண்களும், ஆட்டோக்களின் நான்கு புறமும் எழுதப்பட்டுள்ளன. இன்னொரு ஆட்டோ, பொருட்களை கொண்டு செல்வதற்கு ஏற்ற வடிவத்தில் உள்ளது.

publive-image

நாட்டிலேயே முதல் முறையாக, போலீஸ் ரோந்து செல்வதற்கு பயன்படுத்தப்படும் பேட்டரி வாகனம் இவைதான் என்றும், ஆனால் இந்த பேட்டரி ஆட்டோக்கள் தற்போது ரோந்து பயன்பாட்டிற்கு வரவில்லை எனவும், வரும் நாட்களில் கூடிய விரைவில் ரோந்து பணிக்கு பயன்படுத்தப்படும் காவல்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பி.ரஹ்மான், கோவை

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu Coimbatore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment