இந்நிலையில் இந்த முறையில் நீங்கள் குல்பி ஐஸ்கிரீம் சாப்பிட்டால் மிகவும் நன்றாக இருக்கும்.
தேவையான பொருட்கள்
பால் – 2 லிட்டர்
பாதாம்- 15 கிராம்
முந்திரி- 15 கிராம்
கான்பிளவர்- 1 மேசைக்கரண்டி
ஜெலட்டின்- 2 தேக்கரண்டி
ரோஸ் எசன்ஸ் : 1 தேக்கரண்டி
ஐசிங் சுகர் – 200 கிராம்
செய்முறை: 2 லிட்டர் பாலை நன்றாக காய்ச்ச வேண்டும். 1 லிட்டர் வரை குறைய வேண்டும். பால் வற்றிய பிறகு ஐசிங் சுகரை போட வேண்டும். தொடர்ந்து அடுப்பில் இருந்து இறக்கி சிறிது பாலை எடுத்து அதில் கான்ப்ளேவரை கரைத்து பாலில் ஊற்றி மீண்டும் அடுப்பில் வைத்து கிளர வேண்டும். மேலும் பாலை சேர்த்து பாதாம், முந்திரி, பிஸ்தாவை அரைத்துகொள்ளுங்கள். ஜெலட்டினை 50 எம்.எல் சூடான தண்ணீரில் கரைத்து பாலில் சேர்க்க வேண்டும். முந்திரி கலவையையும், ஜெலட்டின், ரோஸ் எசன்ஸையும் சேர்க்க வேண்டும். எல்லாவற்றயும் ஒன்றாக கலக்கி குளிர்சாதனப்பெட்டியில் வைக்க வேண்டும். சுவையான குல்பி ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“