/tamil-ie/media/media_files/uploads/2017/09/Police-lawyers-attack.jpg)
சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல் ஆய்வாளருக்கும், வழக்கறிஞர்களுக்கும் இடையேயான தள்ளு-முள்ளு காட்சிகள் வெளியாகியுள்ளது.
கொளத்தூர் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் முனிசேகர். இவர் வழக்கு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் சென்றுள்ளார்.
வழக்கை முடித்து விட்டு திரும்பும் போது, அவரை வழக்கறிஞர்கள் சூழ்ந்து கொண்டு இழுத்துச் செல்கின்றனர். அப்போது, அரங்கேறிய தள்ளு - முள்ளு காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவரை வழக்கறிஞர்கள் இழுத்துச் செல்வது போன்ற காட்சிகளும், தகாத வார்த்தைகளால் பேசுவது போன்ற காட்சிகளும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. ஆனால், காவல் ஆய்வாளருக்கும், வழக்கறிஞர்களுக்கும் இடையே என்ன பிரச்னை நடைபெற்றது? எதற்காக அவரை சூழ்ந்து கொண்டு வழக்கறிஞர்கள் இழுத்துச் செல்கின்றனர்? என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல் ஆய்வாளர் ஒருவருக்கே இதுபோன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us