டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை கூடுதல் விலைக்கு ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என அமைச்சர் முத்துசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னையில் டாஸ்மாக் தொழிற்சங்க நிர்வாகிகளுடன் மது விலக்குத்துறை அமைச்சர் முத்துசாமி ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டாஸ்மாக் கடையில் மதுபானங்கள் நிர்ணயம் செய்யபட்ட விலைக்கு விற்பனை செய்ய வேண்டும்.
அரசுக்கும் நிர்வாகத்திற்கும் அவப்பெயர் ஏற்படும் வகையில் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்யக்கூடாது, மேலும் சமூக வலைதளங்களில் தவறான முறையில் பதிவு செய்ய கூடாது. மீறினால் குற்றவியல் நடவடிக்கை உள்ளிட்ட கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“