Advertisment

லண்டன் மசூதியில் தாக்குதல்... ஒருவர் பலி, 7 -பேர் காயம்... தீவிரவாதிகளின் சதி வேலையா?

author-image
Ganesh Raj
புதுப்பிக்கப்பட்டது
New Update
London mosque attack

லண்டனில் உள்ள மசூதியுயின் வேன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதில் ஒருவர் உயிரிழந்தார். 7 பேர் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

லண்டனில் சமீப காலமாக தீவிரவாத தாக்குதல் சம்பவம் நடப்பது அதிகரித்து வருகிறது. இந்நிலையில், லண்டனில் உள்ள பின்ஸ்பரி பார்க்கில் உள்ள மசூதியின் வெளிவரும் வாயிலில் சென்றவர்கள் மீது நேற்றிரவு வேன் மோதியது. இதில் ஒருவர் உயிரிழந்தார், 7 பேர் காயமடைந்தனர். இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் வேன் ஓட்டுநரை மடக்கிப்பிடித்து, போலீஸாரிடன் ஒப்படைத்தனர்.

இந்த தாக்குதல் குறித்து லண்டன் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இது தீவிரவாத தாக்குதலாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

சமீபத்தில் லண்டன் ப்ரிட்ஜில் இது போன்ற தாக்குதல் நடத்தப்பட்டதில் 8 பேர் உயிரிழந்தனர். காரில் வந்த மர்ம நபர்கள் பொதுமக்கள் காரை வைத்து மீது மோதியும், பின்னர் காரில் இருந்து இறங்கி அங்குள்ள மக்களை பயங்கர ஆயுதங்கள் மூலம் தாக்கியும் வெறிச்செயலில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலில் 8 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 3 நபர்கள் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment