உயர்நீதிமன்ற நீதிபதிகளை சந்திக்கும்போது, சால்வை, நினைவுப் பரிசுகள் வழங்கும் நடைமுறையை நிறுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கீழமை நீதிமன்ற நீதிபதிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் ஏராளமான மாவட்ட நீதிமன்றங்கள் உள்ளன. குற்றவியல் நீதிமன்றங்கள், குடும்ப நீதிமனறங்கள் என்ற வகையில் மாவட்ட வாரியாகவும் தாலுகா வாரியாகவும் நீதிமன்றங்கள் உள்ளன. மாவட்ட நீதிபதியாக பணியில் சேரும் ஒருவர் பணி மூப்பின் காரணமாக உயர்நீதிமன்ற நீதிபதியாகவும் பதவி உயர்வு பெறுவார்கள்.
இந்நிலையில் மாவட்ட நீதிபதிகளுக்கு உயர்நீதிமன்றம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. ” உயர்நீதிமன்ற நீதிபதிகளை வரவேற்பதற்காக புறநகர் பகுதிகளில் சாலையில் காத்திருக்கக்கூடாது. பதவி உயர்வு, பணியிட மாற்றம் உள்ளிட்ட எந்த சலுகைகளுக்காகவும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் வீடுகளுக்குச் செல்ல கூடாது.
எந்த காணத்தை கொண்டும் நீதிமன்ற நேரத்தில் கிழமை நீதிமன்ற நீதிபதிகள், நீதிமன்ற அறையில் இருந்து வெளியேறக்கூடாது. உயர்நீதிமன்ற நீதிபதிகளுடன் நேரடியாக எந்த கடிதப் போக்குவரத்தும் வைத்துக்கொள்ளக் கூடாது. பதிவுத்துறை மூலமாக மட்டுமே தொடர்பு கொள்ள வேண்டும். நீதிமன்ற வளாகத்துக்கு வெளியே கருப்பு நிற கோட், டை அணிவதை தவிர்க்க வேண்டும்.” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“