Advertisment

அரசு வழக்குரைஞர்கள் கட்டண பாக்கி: இந்த உத்தரவு பிறப்பிக்க நேரிடும்.. ஐகோர்ட் கடும் எச்சரிக்கை

தமிழ்நாடு அரசு வழக்கறிஞர்களுக்கான கட்டண பாக்கி கோரிக்கைகள் விவகாரத்தில் தலைமைச் செயலாளர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட நேரிடும் என சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

author-image
WebDesk
New Update
Liquor at sports events in Tamil Nadu

சென்னை ஐகோர்ட்

தமிழ்நாட்டில் 2006 முதல் 2011 ஆம் அண்டு வரை அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞராக பணியாற்றிய எஸ் ராமசாமிக்கு வழங்க வேண்டிய ரூ.1 கோடியே 95 லட்சம் ரூபாயை 2 வாரங்களில் வழங்க மாநில அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

Advertisment

இந்த உத்தரவை எதிர்த்து 2012-ம் ஆண்டு தலைமைச் செயலாளர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், கே.குமரேஷ்பாபு ஆகியோர் அடங்கிய அமர்வு, அரசு வழக்கறிஞர்களுக்கான கட்டண நடைமுறைகளை மேற்கொள்ள சிறப்பு அதிகாரியை நியமிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தனர்.

ஆனால் இதுவரை அதிகாரி நியமிக்கப்படவில்லை. முன்னதாக, சிறப்பு அதிகாரி நியமனம் தொடர்பாக அரசாண வெளியிட்டது குறித்து ஆகஸ்ட் 28ல் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டிருந்தனர்.

இந்த வழக்கில் இன்று அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், அரசு வழக்குரைஞர்களுக்கான கட்டண பாக்கி கோரிக்கைகளைப் பெற்று முடிவெடுக்க சிறப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

தொடர்ந்து, இது தொடர்பாக நடவடிக்கை எடுக்காவிட்டால் தலைமைச் செயலாளர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட நேரிடும் எனவும் தெரிவித்துள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Chennai High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment