Advertisment

மதுரை ஆதீன மடத்தின் 1,191 ஏக்கர் நிலத்தை மீட்க இந்து அறநிலையத்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு

மதுரை ஆதீன மடத்திற்கு சொந்தமான 1,191 ஏக்கர் நிலத்தை மீட்க இந்து சமய அறநிலையத்துறைக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்கிழமை உத்தரவிட்டது.

author-image
WebDesk
New Update
Madurai High Court Branch Judges have said that they should examine the 3-year background of the companies conducting campus interviews

சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை

மதுரை ஆதீன மடத்திற்கு சொந்தமான 1,191 ஏக்கர் நிலத்தை மீட்க இந்து சமய அறநிலையத்துறைக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்கிழமை உத்தரவிட்டது.

Advertisment

மதுரை விமான நிலையம் அருகே உள்ள 1,191 ஏக்கர் நிலங்களை மீட்க கோரி சென்னையை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

2008ம் ஆண்டு மதுரை ஆதீனமாக இருந்த அருணகிரி ஆதீனம், புதுவையை சேர்ந்த தனியார் நிறுவனத்துக்கு 99 ஆண்டுகளுக்கு ரூ.5 லட்சத்துக்கு குத்தகைக்குவிட ஒப்பந்தம் போட்டுள்ளார்.

சென்னை திருத்தொண்டர் சபையின் நிறுவனரான ராதாகிருஷ்ணன், முந்தைய ஆதீனம் செய்த ஒப்பந்தத்தை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், கூறியிருப்பதாவது: “மதுரை ஆதீன மடம் மிகவும் பழமையான , பிரசித்திபெற்ற மடமாக இருந்து வருகிறது. இந்த மடத்திற்கு சொந்தமாக தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சொத்துக்கள் உள்ளன. 1,191 ஏக்கர் நிலம் இதன் தற்போதைய மதிப்பு பல நூறு கோடி ரூபாய் ஆகும்.

கடந்த 2008 ஆம் ஆண்டு மதுரை ஆதீனமாக இருந்த அருணகிரி, மதுரை விமான நிலையம் அருகே உள்ள, சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகாவில் இருக்கும் 1191 ஏக்கர் நிலத்தை புதுச்சேரியை சேர்ந்த தனியார் நிறுவனத்திடம் 99 வருடம் குத்தகைக்கு (பவர் ஒப்பந்தம்) விட்டுள்ளார்.

இதை வைத்து 2018 ஆம் ஆண்டு பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது சட்டவிரோதமானது. ஆதீன மடங்களுக்கு சொந்தமான சொத்தை தனியாருக்கு விற்பனை செய்ய முடியாது என சட்டம் உள்ளது. நீதிமன்ற தீர்ப்புகளும் உள்ளன.

மதுரை ஆதீன மடத்திற்கு சொந்தமான 1,191 ஏக்கர் நிலம் தனியார் நிறுவனத்திற்கு சட்ட விரோதமாக விற்பனை செய்யப்பட்டுள்ளது. சட்ட விரோதமாக பதியப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என ராதாகிருஷ்ணன் கோரியிருந்தார்.

இந்த மனு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது தற்போதைய 293 வது ஆதீனமான ஞான சம்பந்தர் தரப்பில் வழக்கறிஞர் அருன் சாமிநாதன் அறிக்கை தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், மறைந்த 292 வது ஆதீனமாக அருணகிரி இருந்தபோது இந்த ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது. தற்போது இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. ஆனால், சட்டவிரோதமாக பத்திர பதிவு செய்தவர்கள் வெளியேற மறுக்கின்றனர். அவர்கள் பண பலம் மிக்கவர்களாக உள்ளனர். எனவே நீதிமன்றம் உரிய உத்தரவு பிறப்பித்து சட்ட விரோதமாக பத்திரப்பதிவு செய்தவர்களை வெளியேற்ற வேண்டும்.” என கோரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, மதுரை விமான நிலையம் அருகே உள்ள மதுரை ஆதின மடத்திற்கு சொந்தமான 1191 ஏக்கர் நிலத்தை மீட்க இந்து அறநிலையத்துறைக்கு உத்தரவிடப்பட்டது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Madurai High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment