Advertisment

குண்டர் சட்ட அதிகாரம் போலீசுக்கு மாற்றம்? அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

குண்டர் சட்ட அதிகாரத்தை மாவட்ட ஆட்சியர்களிடம் இருந்து, காவல் துறைக்கு வழங்கிட சட்டத்திருத்தம் கொண்டுவருவது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்ட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Madurai High Court orders to file report on transfer of gangster law authority to police

High Court-Madurai Bench

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த நாகராஜ், தன் மகன் தமிழழகன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் சுரேஷ்குமார், ராமகிருஷ்ணன் ஆகியோர் விசாரித்தனர்.

Advertisment

தொடர்ந்து, மனுதாரர் மகன் மீதான குண்டர் சட்ட நடவடிக்கை ரத்து செய்யப்படுகிறது. மாவட்டங்களில் குண்டர் சட்ட நடவடிக்கைக்கு கையெழுத்திடும் மாவட்ட ஆட்சியர்களுக்கு மேலும் பணிச்சுமை அதிகரிக்கிறது.

எனவே, இந்த அதிகாரத்தை ஐஜி அல்லது காவல் ஆணையர்களுக்கு வழங்கும் வகையில் தேவையான சட்டத் திருத்தம் மேற்கொள்ள வாய்ப்புள்ளதா என்பது குறித்து அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டனர்.

இந்த நிலையில், குண்டர் சட்ட அதிகாரத்தை மாவட்ட ஆட்சியர்களிடம் இருந்து, காவல் துறைக்கு வழங்கிட சட்டத்திருத்தம் கொண்டுவருவது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்ட்டுள்ளது.

அதில், தேவையான சட்ட திருத்தத்தை 4 வாரங்களில் மேற்கொண்டு, அதுதொடர்பான அறிக்கை தாக்கல் செய்ய உள்துறை செயலருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment