ஜாக்டோ - ஜியோ போராட்டக்காரர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி!

தடையை மீறி போராட்டம் நடத்தும் அரசு ஊழியர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தால் விசாரிப்பதாக நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் தெரிவித்துள்ளனர்

தடையை மீறி போராட்டம் நடத்தும் அரசு ஊழியர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தால் விசாரிப்பதாக நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் தெரிவித்துள்ளனர்

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
ஜாக்டோ - ஜியோ போராட்டக்காரர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி!

7-ஆவது ஊதியக்குழு பரிந்துரைப்படி ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோ கடந்த வியாழக்கிழமை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்தது.

Advertisment

இந்த நிலையில் ஈரோட்டில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் கடந்த புதன்கிழமை சந்தித்து பேசினர். இதில் சுமூக உடன்பாடு எட்டப்படாததால் ஒரு பிரிவினர் வேலை நிறுத்தத்தை தொடங்குவதாக அறிவித்தனர். மற்றொரு பிரிவினர் வேலை நிறுத்தம் அறிவித்ததை தற்காலிகமாக திரும்பப் பெற்றனர்.

இந்நிலையில் வியாழக்கிழமை தமிழகம் முழுவதும் ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் தொடங்கியது. இதனால் ஆசிரியர்கள் இன்றி பள்ளிகள் இயங்கவில்லை.

அரசு அலுவலகங்களும் பல்வேறு இடங்களில் செயல்படாமல் பூட்டப்பட்டது. இந்நிலையில் இந்த போராட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர் சேகரன் சென்னை உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, 'வேலை நிறுத்தத்தை ஆயுதமாக பயன்படுத்தக் கூடாது' என்று கூறி போராட்டத்துக்கு தடைவிதித்து உத்தரவிட்டார்.

Advertisment
Advertisements

மேலும், வரும் 14-ஆம் தேதி ஜாக்டோ ஜியோ அமைப்பின் செயலாளர் நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டது.

இதனிடையே, ஜாக்டோ ஜியோ அமைப்பின் சார்பில் இன்று மீண்டும் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்கியது. வேலூர், கடலூர், மதுரை, நெல்லை ஆகிய பல இடங்களிலும் ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நீதிமன்றத்தின் தடையை மீறி இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து, நீதிமன்ற தடையை மீறி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர் எனவும், அவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்க அனுமதி அளிக்க வேண்டும் என வழக்கறிஞர் சேகரன் மதுரை கிளை நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.

இதையடுத்து, தடையை மீறி போராட்டம் நடத்தும் அரசு ஊழியர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தால் விசாரிப்பதாக நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், தங்களது கோரிக்கைகளை அரசு ஏற்றுக் கொள்ளாத வரை வேலைநிறுத்தத்தை வாபஸ் பெறப் போவதில்லை என்றும், நாளை முதல் வெவ்வேறு வடிவங்களில் போராட்டம் நடைபெறும் எனவும் ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: