Advertisment

வானதி ஸ்ரீனிவாசன் அலுவலகத்திலிருந்து வெளியேற்றப்பட்ட நபர் பலி: நடந்தது என்ன?

வானதி ஸ்ரீனிவாசன் அலுவலகத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட நபர் மர்மமான முறையில் மரணித்ததாக சர்ச்சை கிளம்பியுள்ளது.

author-image
WebDesk
New Update
vanathi srinivasan

வானதி ஸ்ரீனிவாசன் அலுவலகத்திற்கு அடையாளம் தெரியாத நபர் அனுமதியின்றி நுழைந்ததால், அவரை அலுவலகத்திலிருந்து பிடித்து தள்ளியுள்ளார். அதன்பிறகு சிறிது நேரத்தில் அவர் மர்மமான முறையில் மரணித்ததாக தகவல் வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Advertisment

இதுகுறித்து, வானதி ஸ்ரீனிவாசன் கூறியதாவது: "நேற்று மாலை 5.30 மணி அளவிலே, என்னுடைய அலுவலகத்திற்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ஓடி வந்து கதவை தாழிட முயற்சித்திருக்கிறார். என்னுடைய உதவியாளர் அவரை தடுத்து நிறுத்தி அனுப்பியுள்ளார்.

அவர் போதையில் இருந்தாரா என்பது பற்றி எங்களுக்கு தெரியவில்லை. அதன்பிறகு சாலை நடந்த விபத்தில் அவர் உயிரிழந்ததாக செய்தி கேள்விப்பட்டேன். உடனடியாக மாலை நாங்கள் காவல்துறையிடம் புகார் அளித்திருக்கிறோம்.

அவர் யார், அவரது அடையாளம் என்ன, என்ன நோக்கத்தில் எங்களுடைய அலுவலகத்திற்கு வந்தார் என்கிற பின்னணி விவரங்கள் எங்களுக்கு தெரியவில்லை.

காவல்துறை சம்மந்தப்பட்ட நபர்களிடம் யார் அந்த நபர் என்பது பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்", என்றார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Vanathi Srinivasan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment