Advertisment

தக்கலை காவடி கட்டு; பாஜக மத அரசியலை செய்கிறது.. மனோ தங்கராஜ்

மாவட்டத்தில் அமைதியை கெடுக்க மத அரசியலை நடத்த பாஜக முயலுகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Mano Thangaraj accused BJP of doing religious politics

பாஜக மத அரசியலை செய்கிறது என மனோ தங்கராஜ் குற்றஞ்சாட்டினார்

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை காவல் நிலைய காவலர்களால் பாரம்பரிய மாக நடத்தப்படும் காவடி கட்டு நிகழ்ச்சிக்கு எஸ்.பி திடீர் தடை விதித்த நிலையில் பக்தர்கள் போராட்டத்தை தொடர்ந்து மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டது.

இந்நிலையில், கும்பத்தை எடுத்து கொடுத்து கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.

Advertisment

கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கூர் சமஸ்தானத்திக் கீழ் இருந்தபோது ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையன்று, குற்றங்கள் குறைந்து மக்கள் அமைதியாக வாழவும் நீர்வளம் செழித்து விவசாயம் தழைத்தோங்கவும் பாரம்பரியமாக வருடா வருடம் தக்கலை காவல் துறை மற்றும் பொதுப்பணித்துறையினர் விரதமிருந்து வேளிமலை குமாரக்கோயில் முருகன் கோயிலுக்கு காவடி ஏந்தி சென்று நேர்த்தி கடன் செலுத்துவது வழக்கம்.

இம்முறை, கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி பெஞ்சமின் ஜோசப் கும்பத்தை எடுத்து கொடுத்து காவடி கட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து காவலர்கள் காவடியை எடுத்து யானை ஊர்வலத்துடன் வேளிமலை முருகன் கோவிலுக்கு சென்றனர்,ஏராளமான இந்த நிகச்சியில் ஏராளமான பக்தர்களும் பங்கேற்றனர்.

இது குறித்து அமைச்சர் மனோ தங்கராஜ் கூறுகையில், “காலம், காலமாக குமரியில் நடந்து வரும் நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த போதே பல ஆண்டுகள் பங்கேற்றுள்ளேன்.

மாவட்டத்தில் அமைதியை கெடுக்க மத அரசியலை நடத்த பாஜக முயலுகிறது. தக்கலை காவல் நிலையத்தில் திருவிதாங்கூர் மன்னர் ஆட்சி காலத்திலே இது நடைபெற்றது.

இந்தாண்டு பாஜக மற்றும் இந்து முன்னணியினர் இதில் புகுந்துவிட்டனர்” எனத் தெரிவித்தார்.

செய்தியாளர் த.இ. தாகூர்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment