தமிழகத்திற்கு காவிரி நீர் வழங்க முடியாத நிலை உள்ளதாக கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார்.
டெல்லி சென்றுள்ள கர்நாடக அமைச்சர் டி.கே.சிவகுமார், மத்திய ஜலசக்தி அமைச்சர் கஜேந்திர சிங் ஜெகாவத்தை சந்தித்து பேசினார். அப்போது, நிலுவையில் உள்ள கர்நாடக நீர்பாசன திட்டங்களுக்கு அனுமதி கோரினார்.
இதைத்தொடர்ந்து, செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய டி.கே சிவக்குமார் தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் வழங்குவதைப்பற்றி கூறினார். அவர் கூறியதாவது:
"பருவமழை தாமதமானதால் கர்நாடகாவில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது.
கர்நாடகாவில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யவே தண்ணீர் போதவில்லை. காவிரி மேலாண்மை ஆணையம் தண்ணீர் திறக்க உத்தரவிட்டிருந்தாலும் தற்போது காவிரி நீரை திறந்துவிடும் சூழல் இல்லை.” என்று தெரிவித்தார்.
மேலும், "வரும் 8 அல்லது 9-ம் தேதி, கர்நாடகாவில் அனைத்து மாநில நீர்ப்பாசனத்துறை அதிகாரிகள் மாநாடு நடத்த முடிவு செய்துள்ளோம். கே.ஆர்.எஸ் அணை பகுதியில் இந்த மாநாட்டை நடத்துமாறு கேட்டுள்ளேன். ஏனெனில் அங்கு மாநாடு நடத்தினால் தான் அந்த அணையில் உள்ள உண்மையான நீர் இருப்பை மத்திய மற்றும் தமிழ்நாட்டின் அதிகாரிகள் நேரில் பார்க்க முடியும்.” என்று கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil