/tamil-ie/media/media_files/uploads/2018/04/a914.jpg)
ஸ்கீம் என்பதற்கு அர்த்தம் தெரியவில்லை என்றால், டிக்ஷனரியை பார்த்து மத்திய அரசு தெரிந்து கொள்ளட்டும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில், "தேர்தலை கண்டு அஞ்சி நடுங்கி ஓடுகின்ற இயக்கம் அதிமுக கிடையாது. தேர்தலின் போது அதிமுகவிற்கு மக்கள் அங்கீகாரம் வழங்குவார்கள். காவிரி வாரியம் அமைக்கும் போராட்டத்தில் அதிமுக தனித்து செயல்படவில்லை. ஒற்றுமையுடன் செயல்படும் நோக்கில்தான் அரசு சார்பில் அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டப்பட்டது. காவிரிக்காக என்றென்றும் உரிமையை காக்கும் இயக்கம் அதிமுகதான். மெரினாவில் அறவழியில் போராட்டம் நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதுகுறித்து அரசு ஆலோசித்து முடிவெடுக்கும். காவிரிக்கு எதிரான துரோகங்களை மறைக்கவே திமுக செயல் தலைவர் ஸ்டாலின் நடைபயணம், போராட்டங்களை நடத்துகிறார். ஸ்டாலினின் காவிரி உரிமை மீட்பு பயணம் தோல்வியடைந்துள்ளது.
காவிரி நடுவர் மன்ற தீர்ப்பாயத்தின் முடிவை தான், உச்சநீதிமன்றம் மத்திய அரசை செயல்படுத்த கூறியிருக்கிறது. காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு உரிய நீதி கிடைக்கும். ஸ்கீம் என்பதற்கு அர்த்தம் தெரியவில்லை என்றால், டிக்ஷனரியை பார்த்து மத்திய அரசு தெரிந்து கொள்ளட்டும். ஸ்கீம் என்பது காவிரி மேலாண்மை வாரியம் தான் என்பது தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது" என்று அவர் கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.