ஓ.பி.எஸ். - இ.பி.எஸ் அணிகள் இணைய, இரண்டு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்த குழுக்கள் அமைக்கப்பட்டன. இதில், தங்கள் அணி குழு கலைக்கப்பட்டதாக ஓ.பன்னீர்செல்வம் நேற்று அதிரடியாக அறிவித்தார்.
இது குறித்து அமைச்சர் ஜெயக்குமார், இன்று கருத்து தெரிவிக்கையில், '' குழு ஏன் கலைக்கப்பட்டது என்பதை பன்னீர்செல்வம் தான் விளக்க வேண்டும். பேச்சு வார்த்தை தொடர வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். இரு அணிகளும் இணைய வேண்டும்,'' என்றார்.