நீட் தேர்வுக்கு எதிராகவும், மாணவி அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டும், தமிழகம் முழுவதும் தி.மு.க., காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் புதன் கிழமை போராட்டங்கள் நடைபெற்றன. சென்னை தாம்பரத்தில் நடைபெற்ற போராட்டத்தில் திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் பேசியபோது, புதிய இந்தியா என்றால் என்பது குறித்து கவிதை ஒன்றை சுட்டிக்காட்டினார்.