ஒரு சிடி-யை வைத்து ஆட்சியை கலைக்க முடியாது: அமைச்சர் ஜெயகுமார்

author-image
Ganesh Raj
புதுப்பிக்கப்பட்டது
New Update
டிடிவி தினகரனும், மு.க ஸ்டாலினும் கோயபல்ஸ் பிரச்சாரம் செய்கின்றனர்: ஜெயக்குமார்

ஒரு சிடியை வைத்து ஆட்சியை கலைக்க முடியாது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Advertisment

சென்னை விமான நிலையத்தில் செய்திளார்களை அமைச்சர் ஜெயக்குமார் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: ஜனநாயத்தை குழிதோண்டி புதைக்கும் வகையில் மு.க ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். சைக்கிள் ‘கேப்’பில் முதலமைச்சர் பதவியை பிடித்துவிடலாம் என நினைக்கும் மு.க ஸ்டாலின் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது. தமிழக அரசை கலைக்க வேண்டும் என்ற மு.க ஸ்டாலின் கனவு காண்கிறார். ஒரு சிடி-யை வைத்து அரசை கலைக்க முடியாது.

மேலும், அதிமுக-வின் இருஅணிகள் இணைய வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது. ஓபிஎஸ்-காக அணியின் கதவுகள் திறந்தே இருக்கிறன்றன. பேச்சுவார்த்தைக்கு எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்று கூறினார்.

Dmk Mk Stalin D Jayakumar Panneer Selvam

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: