Advertisment

எம்எல்ஏ-க்கள் சுதந்திரமாக உள்ளனர்: டிடிவி தினகரன் விளக்கம்

தன்னை முதல்வராக்கிய கட்சிக்கு துரோகம் செய்தவர்கள் எப்படி மக்களுக்கு நன்மை செய்வார்கள் என டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

author-image
manik prabhu
புதுப்பிக்கப்பட்டது
New Update
Pondy, ADMK

புதுவை விடுதியில் தங்கியுள்ள எம்எல்ஏ-க்கள் சுதந்திரமாக தங்கியுள்ளனர். அவர்களை யாரும் இங்கு பிடித்து வைக்கவில்லை என டிடிவி தினகரன் விளக்கமளித்துள்ளார்.

Advertisment

தினகரனை கட்சிப் பதவியில் இருந்து நீக்கி முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து, அதிமுக-வில் தினகரனை ஓரங்கட்டி விட்டு, எடப்பாடி பழனிசாமி-பன்னீர்செல்வம் அணிகள் கடந்த 21-ம் தேதி இணைந்தன. அதேபோல், அதிமுக தலைமைக் கழகத்தில் கடந்த 28-ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில், சசிகலா மற்றும் தினகரனை ஒதுக்கி வைப்பது என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆனால், சசிகலா மற்றும் தினகரனுக்கு ஆதரவாக பல்வேறு தரப்பினர் அதிமுக-வில் குரல் கொடுத்து வருகின்றனர். டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் 19 பேர் ஆளுநரை சந்தித்து, "முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நாங்கள் வைத்த நம்பிக்கையை இழந்துவிட்டோம். கடந்த முறை எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் எங்களது ஆதரவுடன் தான் அவர் ஜெயித்தார். இப்போது அவரது நடவடிக்கையில் எங்களுக்கு திருப்தி இல்லை" என கடிதம் அளித்துள்ளனர். கடிதம் அளித்த கையுடன் புதுவை சென்ற அவர்கள் அனைவரும் அங்குள்ள விடுதியில் தங்கியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, தமிழக சட்டப்பேரவையை உடனடியாக கூட்டி, பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. பேரவையை கூட்ட தாமதிப்பது குதிரை பேரத்துக்கு வழிவகுக்கும் என எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், டிடிவி தினகரன் தனது ஆதரவு எம்எல்ஏ-க்களை சந்திப்பதற்காக புதுவை சென்றார். அங்கு செய்தியாளர்களை சந்தித்த அவர், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து எம்எல்ஏ-க்களிடம் கலந்தாலோசிக்க இங்கு வந்துள்ளேன். முதல்வரை மாற்றுவதற்காக தான் எம்எல்ஏ-க்கள் இங்கு தங்கியுள்ளனர். எம்எல்ஏ-க்கள் அனைவரும் இங்கு சுதந்திரமாக தங்கியுள்ளனர். இங்கு யாரும் பிடித்து வைக்கப்படவில்லை. தொகுதி மக்களை சந்திக்கவில்லை என்ற குறை மட்டும் தான் அவர்களிடம் உள்ளது. எம்எல்ஏ-க்கள் ஜெயந்தி, உமா மகேஸ்வரி, உள்ளிட்டோர் சொந்த வேலையாக ஊர்களுக்கு சென்றுள்ளனர். ஆளுநரும், குடியரசுத் தலைவரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

நீட் தேர்வினால் மருத்துவ படிப்பில் சேர முடியாமல் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதா குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த டிடிவி தினகரன், முதல்வர், துணை முதல்வர் பதவி விலகினாலே அனைத்தும் சரியாகி விடும். தன்னை முதல்வராக்கிய கட்சிக்கு துரோகம் செய்தவர்கள் எப்படி மக்களுக்கு நன்மை செய்வார்கள் என்றும் கேள்வி எழுப்பினார். மேலும், மாணவி அனிதாவின் உடலுக்கு அரியலூர் சென்று அஞ்சலி செலுத்தவுள்ளோம் எனவும் அவர் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Neet Ttv Dhinakaran Anitha
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment