தமிழக மீனவர்கள் 32 பேர் கைது, 50 பேர் சிறைபிடிப்பு: இலங்கை கடற்படை அட்டூழியம்!

நெடுந்தீவில் கைது செய்யப்பட்ட 10 மீனவர்களும் விசாரணைக்காக காங்கேசன் துறைமுகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்

நெடுந்தீவில் கைது செய்யப்பட்ட 10 மீனவர்களும் விசாரணைக்காக காங்கேசன் துறைமுகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
தமிழக மீனவர்கள் 32 பேர் கைது, 50 பேர் சிறைபிடிப்பு: இலங்கை கடற்படை அட்டூழியம்!

புதுக்கோட்டை மாவட்டம் நெடுந்தீவு அருகே நடுக்கடலில் இன்று மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் 32 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

Advertisment

மேலும், புதுக்கோட்டை, நாகை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 50 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்து விசாரித்து வருகின்றனர். 10க்கும் மேற்பட்ட படகுகளையும் அவர்கள் பறிமுதல் செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட அந்த 32 மீனவர்களையும் விசாரிப்பதற்காக இலங்கை கடற்படை, அவர்களை காங்கேசன் துறைமுகத்துக்கு அழைத்து சென்றுள்ளது.

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வது தொடர் கதையாகி வருகிறது. ஏற்கனவே கைது செய்த தமிழக மீனவர்கள் 77 பேரை சமீபத்தில்தான் நல்லெண்ண அடிப்படை என்ற பெயரில் இலங்கை விடுதலை செய்திருந்தது.

Advertisment
Advertisements

அதன்பிறகு, கச்சத் தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த 4 தமிழக மீனவர்களை க டந்த ஜூலை மாதம் 29-ஆம் தேதி இலங்கை கடற்படை கைது செய்தது. தற்போது மீண்டும், நெடுந்தீவில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் கைது செய்து, விசை படகுகளையும் கைப்பற்றி அட்டகாசம் செய்துள்ளது இலங்கை கடற்படை.

Neduntheevu Srilankan Navy

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: