உலகின் பல்வேறு நாடுகளில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. உருமாறிய ஒமிக்ரான் பி.எஃப்-7 தொற்று பரவி வருகிறது. இந்த தொற்று சீனாவில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்தநிலையில் இந்தியா கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. விமான நிலையங்களில் கண்காணிப்பு மற்றும் வெளிநாட்டுப் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அமெரிக்கா, சீனா, ஜப்பான், தாய்லாந்து போன்ற நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
அதன்படி சீனாவில் இருந்து இலங்கை மூலம் மதுரை விமான நிலையம் வந்த தாய், மகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் நேற்று அவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இவர்களுடன் விமானத்தில் பயணித்து 70 பயணிகளுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், தொற்று உறுதியான இருவருக்கும் பி.எஃப்-7 தொற்று பாதிப்பா எனக் கண்டறிய பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/