பாசிச ஆட்சியை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சிக்கு வழிகாட்டியாக நல்லகண்ணு விளங்குகிறார் என்று 98வது பிறந்த்நாளை விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
சிபிஎம் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு. இவர் பல்வேறு போராட்டங்களை நடத்தி தொடர்ந்து அரசியல் ரீதியாக பல்வேறு மாற்றங்களை தனது உழைப்பால் நிகழ்த்தி உள்ளார். இந்நிலையில் நல்லகண்ணுவின் 98 பிறந்நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் சென்னையில் உள்ள சிபிஐ கட்சி அலுவகத்திற்கு சென்று நேரில் வாழ்த்தினார். மேலும் பாசிச ஆட்சியை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சிக்கு வழிகாட்டியாக நல்லகண்ணு விளங்கிறார் என்று தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில் அமைச்சர் பொன்முடி, எ.வ.வேலு, சிபிஎம் மாநில செயலாளர் முத்தரசன், வைகோ ஆகியோர் கலந்துகொண்டனர். இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவரது ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். ” தமிழகத்தின் மூத்த மக்கள் சேவகர், ஏழை பங்காளர், கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் அய்யா திரு நல்லகண்ணு அவர்களின் பிறந்த தினமான இன்று அவரை வாழ்த்தி வணங்குகிறேன்.” இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.