சென்னையில் பல்வேறு இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் தமிழகத்தில் உள்ள 10 நகரங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, மதுரை, திருச்சி, தேனி உள்ளிட்ட சுமார் 10 இடங்களிலும், சென்னை ஓட்டேரி, திருவெற்றியூர் உள்ளிட்ட இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் சோதை நடத்தி வருகின்றனர்.
பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகிக்கும் நபர்களின் வீடுகளிலும் என்.ஐ.ஏ வழக்குகளில் தொடர்புடையவர்களின் வீடுகளிலும் சோதனை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் இந்தச் செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிகழத்தில் காலை முதல் பல்வேறு இடங்களில் என்.ஐ.ஏ அதிகரிகள் சோதனை நடத்தி வருவது குறிப்பிடதக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“