32 நாட்களாக நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டிருக்கும் டிடிவி தினகரனின் மீது இன்று மற்றொரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக டெல்லி நீதிமன்றத்தில் போலீசார் அளித்த தகவலில், “தினகரன் மற்றும் இடைத்தரகர் சுகேஷிடம் பேசிய ஆடியோ டேப்பை நாங்கள் கேட்டோம். அதில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் தேதியை, தனக்கு பிடித்த தேதியான 5-ஆம் தேதிக்கு நிர்ணயிக்க ஏற்பாடு செய்ய சுகேஷிடம் கூறியிருக்கிறார். இதையடுத்து தினகரன் மீது மற்றொரு வழக்கு பதிவு செய்துள்ளோம். சின்னம் விவகாரத்தில், மேலும் ஐந்து பேரை கைது செய்யவுள்ளோம். வழக்கு விசாரணை இன்னும் மீதமுள்ளதால் தினகரன், சுகேஷுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது” என்று தெரிவித்துள்ளனர்.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook
Web Title:One more case filed against ttv dinakaran