சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் 21வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பயணித்துள்ளார்.
இதற்கு, ஆளுநரின் வருகையை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட், மார்கிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, தமிழக வாழ்வுரிக் கட்சி, திராவிட விடுதலைக் கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் போராட்டம் நடத்தி வந்தனர்.
சேலம் அரசினர் பொறியியல் கல்லூரி அருகே அனைவரும் கறுப்புக்கொடி வைத்து தனது கண்டனத்தை தெரிவித்து போராட்டம் நடத்தினர்.
மேலும் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் மே. சண்முகராஜா, விடுதலை சிறுத்தை கட்சியின் நிர்வாகிகள் மற்றும் பல்வேறு கட்சியைச் சார்ந்த நிர்வாகிகள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil