Advertisment

ஆதரவாளர்களுடன் துணை முதல்வர் பன்னீர்செல்வம் தீவிர ஆலோசனை

சசிகலாவை பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கும் தீர்மானம் அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

author-image
manik prabhu
புதுப்பிக்கப்பட்டது
New Update
OPS, Sasikala, AIADMK, O Panneerselvam

அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் வருகிற திங்கள்கிழமை நடைபெறவுள்ள நிலையில், தனது ஆதரவாளர்களுடன் துணை முதல்வர் பன்னீர்செல்வம் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

Advertisment

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், பிளவுபட்ட அதிமுக கடந்த 21-ம் தேதி ஒன்றிணைந்தது. பன்னீர்செல்வம் துணை முதல்வராகவும், அவரது ஆதரவாளர் மாஃபா பாண்டியராஜன் அமைச்சராகவும் பொறுப்பேற்றனர். அதிமுக-வை வழி நடத்தும் குழுவும் அமைக்கப்பட்டது. டிடிவி தினகரனை துணைப் பொதுச் செயலாளர் பதிவியில் இருந்து நீக்குவதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியான நிலையில், சசிகலாவும் விரைவில் அதிமுக பொதுச் செயலளார் பதவியில் இருந்து நீக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை அக்கட்சியின் எம்.பி., வைத்தியலிங்கம் வெளியிட்டார். தொடர்ந்து, வைதியலிங்கத்தை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து தினகரன் நீக்கி உத்தரவு பிறப்பித்தார்.

இதையடுத்து, டிடிவி ஆதரவாளர்களுக்கும், வைத்தியலிங்கம் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. அதேசமயம், ஆளுநரை சந்தித்த தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் 19 பேர், முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நாங்கள் வைத்த நம்பிக்கையை இழந்துவிட்டோம் என கடிதம் அளித்தனர்.

இதனைத்தொடர்ந்து, தமிழக சட்டப்பேரவையை கூட்ட உடனடியாக கூட்டி, பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் அனைவரும் புதுவை ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டனர். இது குதிரை பேரத்துக்கு வழிவகுக்கும் என்ற விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

இத்தகைய பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் வருகிற திங்கள் கிழமை நடைபெறவுள்ளது. அதில், பொதுக் குழு கூடும் தேதி, பொதுக்குழுவில் விவாதிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தவுள்ளனர். சசிகலாவை பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கும் தீர்மானம் பொதுக்குழுவில் நிறைவேற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் தனது ஆதரவாளர்களுடன் துணை முதல்வர் பன்னீர்செல்வம் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்த கூட்டத்தில், கே.பி.முனுசாமி, மாஃபா பாண்டியராஜன், மைத்ரேயன் உள்ளிட்ட ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பலர் பங்கேற்றுள்ளனர்.

அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டத்தில் எந்த மாதிரியான விஷயங்களை தங்கள் தரப்பினர் பேசுவது என்பன உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை ஓபிஎஸ் தரப்பினர் விவாதித்து வருவதாக தெரிகிறது.

பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமி ஆதரவு அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி மற்றும் தங்கமணி ஆகியோர் அவரது இல்லத்துக்கு வருகை புரிந்தனர். அவர்கள் இருவரும் ஓபிஎஸ் தரப்பு ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Ops O Panneerselvam Ttv Dhinakaran Sasikala
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment