Advertisment

ஜெ., மரணம்... சிபிஐ விசாரணை தேவை! பிரதமரிடம் ஓ.பி.எஸ் கோரிக்கை

எங்களின் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக பிரதமர் உறுதியளித்துள்ளார்

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
ஜெ., மரணம்... சிபிஐ விசாரணை தேவை! பிரதமரிடம் ஓ.பி.எஸ் கோரிக்கை

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் இன்று மாலை சந்தித்து பேசினார். அந்த சந்திப்பின் போது, "தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினை, காவிரி மேலாண்மை வாரியம், NEET தேர்வில் விலக்கு உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்தும், விவசாயிகளின் வங்கிக் கடன்களை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்" என்றும் கோரிக்கை வைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், "தமிழகத்தில் நிலவும் பிரச்சினைகள் மற்றும் தேவைகள் குறித்து, பிரதமர் நரேந்திர மோடி அவர்களிடம் எடுத்துக் கூறியதாகவும், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை தேவை" என வலியுறுத்தியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எங்களின் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக பிரதமர் அவர்கள் உறுதியளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Ops Cbi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment