Advertisment

கார்த்தி சிதம்பரம் வெளிநாட்டு சொத்து வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கப்படுமா? தீர்ப்பு தள்ளிவைப்பு

ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம், மகன் கார்த்தி சிதம்பரம், மருமகள் ஸ்ரீநிதி கார்த்தி ஆகியோருக்கு எதிராக வருமான வரித் துறை, கடந்த மாதம் புகார் மனுவை தாக்கல் செய்தது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
tamilrockers darbar movie, tamil rockers darbar movie download, darbar tamilrockers.com2019, tamilrockers2019 darbar, தர்பார் மூவி, தமிழ்ராக்கர்ஸ்

tamilrockers darbar movie, tamil rockers darbar movie download, darbar tamilrockers.com2019, tamilrockers2019 darbar, தர்பார் மூவி, தமிழ்ராக்கர்ஸ்

ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீதான கறுப்புப் பண சட்ட வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க கோரி தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிமன்றம் தள்ளிவைத்தது.

Advertisment

இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜில் 6 கோடியே 17 லட்சம் ரூபாய் மதிப்பிலான இரு சொத்துக்களையும், அமெரிக்காவில் 3.28 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களையும், வங்கிக் கணக்குகளையும் மறைத்ததாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம், மகன் கார்த்தி சிதம்பரம், மருமகள் ஸ்ரீநிதி கார்த்தி ஆகியோருக்கு எதிராக வருமான வரித் துறை, கறுப்புப் பண சட்டத்தின் கீழ் சென்னை எழும்பூர் பொருளாதார குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த மாதம் புகார் மனுவை தாக்கல் செய்தது.

இதனையடுத்து இந்த புகாரை மனுவாக விசாரணைக்கு ஏற்று கொண்டது எழும்பூர் நீதிமன்றம். கடந்த 25 ஆம் தேதி அன்று நளினி சிதம்பரம் உள்ளிட்டவர்கள் நேரில் ஆஜராகினர்.

இந்நிலையில் எழும்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கக் கோரி நளினி சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மற்றும் ஸ்ரீநிதி ஆகியோர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள், தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆஷா அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோபால் சுப்பிரமணியம், ‘கருப்பு பண சட்டத்தின் கீழ் வழக்கு தொடர முடியாது. வருமான வரித்துறை கோரிய விபரங்களை அளித்த பிறகு வழக்கு தொடர்வது தவறானது. எனவே கருப்பு பண சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும்’ என வாதிட்டார்.

வருமான வரித்துறை சார்பில் ஆஜரான மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், ஜி. ராஜகோபால், கருப்பு பண சட்டத்தின் கீழ் வழக்கு தொடர முகந்திரம் உள்ளது. வழக்கின்

புகாரின் தகுதி குறித்து நீதிமன்றம் ஆய்வு செய்ய முடியாது. எனவே அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததை அடுத்து வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

 

Chennai High Court P Chidambaram
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment