பிளஸ் 1-க்கும் அடுத்த ஆண்டு முதல் பொதுத் தேர்வு: அதிரடி அறிவிப்பு

எனவே மாணவர்கள் அடுத்த ஆண்டு முதல் பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு என தொடர்ச்சியாக மூன்று பொதுத்தேர்வுகளை சந்திக்க நேரிடும்.

எனவே மாணவர்கள் அடுத்த ஆண்டு முதல் பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு என தொடர்ச்சியாக மூன்று பொதுத்தேர்வுகளை சந்திக்க நேரிடும்.

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
பிளஸ் 1-க்கும் அடுத்த ஆண்டு முதல் பொதுத் தேர்வு: அதிரடி அறிவிப்பு

பிளஸ் 2 தேர்வினைப் போல், இனி பிளஸ் 1 தேர்வுகளும் அடுத்த ஆண்டு முதல் பொதுத் தேர்வுகளாக நடத்தப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் இன்று அறிவித்துள்ளார்.

Advertisment

நீட் தேர்வு போன்ற போட்டித் தேர்வுகளுக்கு தயார்படுத்தும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

எனவே மாணவர்கள் அடுத்த ஆண்டு முதல் பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு என தொடர்ச்சியாக மூன்று பொதுத்தேர்வுகளை சந்திக்க நேரிடும். குறிப்பாக, இனி பதினொன்றாம் வகுப்பு பாடங்களையும் மாணவர்கள் முழுவதுமாக படிக்க நேரிடும். இதன்மூலம், தேசிய அளவிலான போட்டித் தேர்வுகளுக்கு மாணவர்கள் நன்றாக தயார் செய்துகொள்ளலாம் என கூறப்படுகிறது.

முன்னதாக, நாளை மறுநாள் (19-ஆம் தேதி) பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று பள்ளிக் கல்வித்துறை இன்று அறிவித்திருந்த நிலையில், தற்போது இந்த புதிய அறிவிப்பை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டுள்ளார்.

Advertisment
Advertisements
Sengottaiyan Tamilnadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: