காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசிக்க பிரதமர் நரேந்திர மோடி, வரும் 23ம் தேதி தமிழகம் வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை உறுதிப்படுத்தும் பொருட்டு, ஆயுதம் தாங்கிய கறுப்பு உடையணிந்த சிறப்பு போலீசார், காஞ்சிபுரத்தில் முகாமிட்டுள்ளனர்.
சிறப்பு ஹெலிகாப்டர் மூலம், 23ம் தேதி மாலை காஞ்சிபுரத்திற்கு வரும் பிரதமர் மோடி, அத்திவரதரை தரிசிக்கிறார். காஞ்சிபுரத்திலேயே இரவு தங்குகிறார். 24ம் தேதி காலை, பிரதமர் மோடி, நின்ற கோலத்தில் எழுந்தருளும் அத்திவரதரை மீண்டும் தரிசனம் செய்கிறார்.
மோடி வருகையையொட்டி காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆண்கள் கல்லூரியில் ஹெலிகாப்டர் தளம் அமைக்கப்பட்டு உள்ளது. ஹெலிகாப்டர் மூலம் இங்கு வரும் மோடி, அங்கிருந்து குண்டு துளைக்காத கார் மூலம் காஞ்சிபுரம் கோவிலுக்கு செல்கிறார். மோடி வருகையையொட்டி காஞ்சிபுரத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.