Advertisment

’இனி நீ இங்க பூஜை செய்யக்கூடாது’: கோவில் பூசாரியை மிரட்டியதாக ஜெ. தீபா மீது புகார்

போயஸ் கார்டனில் அருகில் உள்ள பிள்ளையார் கோவிலில் பூஜை செய்ய விடாமல் ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக ஜெ. தீபா மற்றும் அவரது கணவர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பூசாரி புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
பூசாரியை மிரட்டியதாக ஜெ. தீபா மீது புகார்

பூசாரியை மிரட்டியதாக ஜெ. தீபா மீது புகார்

போயஸ் கார்டனில் அருகில் உள்ள  பிள்ளையார் கோவிலில் பூஜை செய்ய விடாமல்  ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக ஜெ. தீபா மற்றும் அவரது கணவர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பூசாரி புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisment

சென்னை தி.நகர் அருளாம்பாள் தெருவை சேர்ந்தவர்  கோவில் பூசாரி ஹரிஹரன். இவர் போயஸ் தோட்டத்தில் உள்ள பிள்ளையார் கோவிலில் தினமும் பூஜை செய்து வருகிறார்.

இந்நிலையில் இவர் , தன்னை ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக ஜெ. தீபா, அவரது கணவர் மாதவன் உள்பட 50 பேர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில் இந்த புகாரில் “ ஆகஸ்டு காலை வழக்கம் போல் 8.30 மணியளவில் நான் கோவிலில் பூஜை செய்ய சென்ற போது, அங்கு வந்த ஜெ.தீபா, அவரது கணவர் மாதவன் உள்பட 50 பேர் என்னை பூஜை செய்ய விடாமல் தடுத்து நிறுத்தினர்.

அப்போது ஜெ. தீபா, என்னிடம் உன்னை யார் பூஜை செய்ய விட்டது ? என தகாத வார்த்தையால் பேசி தாக்க முயன்றார். இதனை தடுக்க வந்த காவலரையும் தகாத வார்த்தையால் திட்டினார்.

இனி இந்த கோவிலில் பூஜை செய்ய வந்தால் உன்னை கொலை செய்து விடுவோம் என ஜெ. தீபா, மாதவன் உள்பட பலரும் மிரட்டினார்கள். இதனால் கோவிலில் தொடர்ந்து பூஜை செய்ய எனக்கு அனுமதி அளித்து உரிய பாதுகாப்பு  வழங்க வேண்டும். சமந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் “ என்று புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil ”

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment