ஆளுநர் மாளிகையில் கொண்டாடப்பட்ட பொங்கல் விழாவில் எடப்பாடி பழசனிசாமி மற்றும் ஓ. பன்னீர் செல்வம் கலந்து கொண்டனர்.
சமீபத்தில் ஆளுநர் உரையுடன் தொடங்கிய சட்டப்பேரவையில் அதிரடியான விஷயங்கள் நடைபெற்றது. ஆளுநர் உரையில் தமிழ்நாடு, திராவிட மாடல் , சமூக நீதி, பெரியார் போன்ற வார்த்தைகளை அவர் தவிர்த்துவிட்டார்.
இந்நிலையில் ஆளுநர் பேசியபோது, சட்டபேரவையில் கடும் அமலி நிலவியது. திமுக கூட்டணி கட்சிகள் கூட்டத்தை புறகணித்தனர். மேலும் ஸ்டாலின் பேசும்போது, ஆளுநர் கிளம்பி சென்றுவிட்டார். ஆளுநரின் இந்த நடவடிக்கை குறித்து பல விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில் ஆளுநர் மாளிகையில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் புறக்கனித்தனர். இந்நிலையில் அதிமுக சார்பாக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ. பன்னீர் செல்வம் விழாவில் கலந்துகொண்டனர்.