Advertisment

எம்எல்ஏ-பதவி பறிபோனாலும் கவலையில்லை... கொறடா உத்தரவை மீறி வாக்களிப்பேன்: தமீமுன் அன்சாரி

author-image
Ganesh Raj
புதுப்பிக்கப்பட்டது
New Update
Thamimun Ansari

குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு தான் வாக்களிக்க வேண்டும் என கொறடா உத்தரவிட்டால், அதையும் மீறி பாஜக-வுக்கு எதிராக வாக்களிப்பேன் என்று மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் தமீமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.

இது குறித்து மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் தமீமுன் அன்சாரி செய்தியாளர்களிடம் கூறியதாவது: குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக-வின் வேட்பாளருக்கு ஆதரவு அளிக்க முடியாது. நானும் எனது கட்சியும் பின்பற்றக் கூடிய அடிப்படை கொள்கைகளில் எந்தவகையிலும் சமரசம் செய்து கொள்ள மாட்டோம்.

கொறடா என்னை பாஜக-வுக்கு தான் வாக்களிக்க வேண்டும் என கூற மாட்டார் என எதிர்பார்க்கிறேன். அதிமுக-வும் அப்படியொரு முடிவை எடுக்காது என நினைக்கிறேன். அதையும் மீறி அவர்கள் அவ்வாறு எடுத்தால், கொறடா உத்தரவையும் மீறி நான் பாஜக-வுக்கு எதிராக வாக்களிப்பேன். அதனால் எனது சட்டமன்ற உறுப்பினர் பதவி போனாலும் கவலைப்பட மாட்டேன் என்று கூறியுள்ளார்.

Bjp Thamimun Ansari
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment