குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு தான் வாக்களிக்க வேண்டும் என கொறடா உத்தரவிட்டால், அதையும் மீறி பாஜக-வுக்கு எதிராக வாக்களிப்பேன் என்று மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் தமீமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.
இது குறித்து மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் தமீமுன் அன்சாரி செய்தியாளர்களிடம் கூறியதாவது: குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக-வின் வேட்பாளருக்கு ஆதரவு அளிக்க முடியாது. நானும் எனது கட்சியும் பின்பற்றக் கூடிய அடிப்படை கொள்கைகளில் எந்தவகையிலும் சமரசம் செய்து கொள்ள மாட்டோம்.
கொறடா என்னை பாஜக-வுக்கு தான் வாக்களிக்க வேண்டும் என கூற மாட்டார் என எதிர்பார்க்கிறேன். அதிமுக-வும் அப்படியொரு முடிவை எடுக்காது என நினைக்கிறேன். அதையும் மீறி அவர்கள் அவ்வாறு எடுத்தால், கொறடா உத்தரவையும் மீறி நான் பாஜக-வுக்கு எதிராக வாக்களிப்பேன். அதனால் எனது சட்டமன்ற உறுப்பினர் பதவி போனாலும் கவலைப்பட மாட்டேன் என்று கூறியுள்ளார்.