குடியரசுத் தலைவர் தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது குறத்து தற்போது வரை முடிவு எடுக்கப்படவில்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் புதியதாக கட்டப்பட்ட அரசு மருத்துவக் கல்லூரியின் திறப்புவிழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு மருத்துவக் கல்லூரியை திறந்து வைத்தார்.
விழாவின் முடிவில் செய்தியார்களிடம் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது அவர் கூறியதவாது: நடைபெறவுள்ள குடியரசுத் தலைவர் தேர்தலில் யாருக்கு ஆதரவளிக்க வேண்டும் என்பது குறித்து இன்னும் முடிவெடுக்கப்படவில்லை. மாட்டிறைச்சி விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து விரைவில் தெரிவிக்கப்படும். நீட் தேர்வில் விலக்கு அளிக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. அரசு மருத்துவனைகளில் உள்ள மருத்துவர்கள் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக அரசு 122 எம்எல்ஏ-க்கள் பலத்துடன் வலிமையாகவும், நிலையாகவும் செயல்பட்டு வருகிறது என்று கூறினார்.