/tamil-ie/media/media_files/uploads/2018/01/a45.jpg)
Rajinikanth meets Media
ரஜினியை தமிழக முதல்வராக முன்னிறுத்தி, கோவையில் வருகிற மே மாதம் பிரமாண்ட மாநாடு ஒன்றை நடத்துகிறார் தமிழருவி மணியன்.
ரஜினி அரசியலுக்கு வருவதை முன்கூட்டியே அறிவிக்கும் வகையில், ‘ரஜினியின் அரசியல் பிரவேசம் ஏன் அவசியம்?’ என்ற பெயரில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதி, காந்திய மக்கள் இயக்கம் சார்பில் திருச்சியில் மாநாடு நடத்தப்பட்டது. தமிழருவி மணியன் தலைமையில் நடந்த இந்த மாநாட்டில் நிறைய பேர் கலந்து கொண்டனர். கடந்த வருடம் டிசம்பர் 31ஆம் தேதி ரஜினியும் தனது அரசியல் பிரவேசத்தை உறுதி செய்தார்.
இந்நிலையில், காந்திய மக்கள் இயக்கம் சார்பில் மீண்டும் ஒரு பிரமாண்டமான மாநாட்டை ரஜினிக்காக நடத்த செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. ‘முதல்வராக ரஜினியை முன்னிறுத்தும் காந்திய மக்கள் இயக்க மாற்று அரசியல் மாநாடு’ என்ற பெயரில் இது நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில், ரஜினியை தமிழகத்தின் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி அறிவிப்பு வெளியிடுகிறார் தமிழருவி மணியன்.
மே மாதம் 20ஆம் தேதி கோவையில் உள்ள கொடீசியா வளாகத்தில் இந்த மாநாடு நடைபெற உள்ளது. காந்திய மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த தொண்டர்கள், ரஜினி ரசிகர்கள் உள்பட ஏராளமானோர் இந்த மாநாட்டில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.