புதுச்சேரியில் 15க்கும் மேற்பட்ட வாகனங்களை இடித்துச் சென்ற சென்னை வாலிபர்களை பொதுமக்கள் மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்
Advertisment
இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு
புதுச்சேரியில் சுற்றுலாவுக்கு வந்திருந்த சென்னை தாம்பரம் பகுதியைச் சேர்ந்த ஐந்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் உப்பளம் பகுதியில் உள்ள பாண்டி மெரினா கடற்கரையில் மது அருந்தி உள்ளனர். பிறகு மது போதையில் நகரப் பகுதியில் தாங்கள் வந்த காரை ஓட்டிச் சென்றுள்ளனர்.
நிதானம் இல்லாமல் இருந்ததால் தாறுமாறாக ஓடிய கார், சாலையோரங்களில் சென்ற வாகனங்கள் மற்றும் சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்தவர்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.
இதையடுத்து பொதுமக்கள் மற்றும் போலீசார் காரை மடக்கி பிடித்தனர். மேலும் காரில் இருந்த இளைஞர்களுக்கு, பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்...
இந்த சம்பவத்தால் புதுச்சேரி நகரப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது, இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட இரண்டு பேர் கவலைக்கிடமாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்
செய்தி: பாபு ராஜேந்திரன், புதுச்சேரி
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“