விழுப்புரம்: புதுச்சேரியில் இருந்து கடத்தி வந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்து அழித்த போலீஸ்

தீபாவளி பண்டிகையையொட்டி, புதுச்சேரியில் இருந்து குறைந்த விலைக்கு மதுபானங்களைக் கடத்தி வந்தவர்கள் மீது போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்தனர்.

தீபாவளி பண்டிகையையொட்டி, புதுச்சேரியில் இருந்து குறைந்த விலைக்கு மதுபானங்களைக் கடத்தி வந்தவர்கள் மீது போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்தனர்.

author-image
Kalaiyarasi Sundharam
New Update
villupuram

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை இன்று (திங்கட்கிழமை) உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. பெரும்பாலான மக்கள் புத்தாடைகள் அணிந்து, பட்டாசு வெடித்தும், இனிப்புகள் உள்ளிட்ட பலகாரங்கள் சாப்பிட்டும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். ஆனால் மதுபிரியர்கள் தங்கள் பாணியில் மது அருந்தி உற்சாகம் அடைவார்கள்.

Advertisment

கடலூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் இருந்தாலும், அண்டை மாநிலமான புதுச்சேரி மது பாட்டில்கள் மீதுதான் அவர்களுக்கு அளப்பரிய ஆசை உண்டு. ஏனெனில், புதுச்சேரியில் குறைந்த விலைக்கு மதுபாட்டில்கள், சாராயம் மற்றும் கள் கிடைப்பதே முக்கிய காரணமாகும். இதனால் சிலர் அங்கு சென்று மது அருந்துகின்றனர். ஆனால் இதை சிலர் வியாபார உத்தியாகவும் பார்க்கின்றனர். அதாவது, புதுச்சேரியில் இருந்து மதுபானங்களை வாங்கி வந்து, இங்கு அதிக விலைக்கு விற்கிறார்கள். இவ்வாறு புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்கள், சாராயத்தைக் கடத்தி வருபவர்களைப் பிடிக்க 8 சோதனைச் சாவடிகளிலும் போலீசார் 24 மணி நேரமும் கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதனிடையே, ஆல்பேட்டை சோதனைச் சாவடிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் நேரில் சென்று வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது ஓரிரு மது பாட்டில்கள், சாராயப் பாக்கெட்டுகளை பஸ், கார், ஆட்டோ, இரு சக்கர வாகனங்களில் சிலர் கடத்தி வந்தனர். அவர்களிடம் இருந்து மதுபாட்டில்கள், சாராயத்தை பறிமுதல் செய்த போலீஸ் சூப்பிரண்டு, அவற்றை கீழே கொட்டி அழித்தார். மேலும், அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தார். அதிக மது பாட்டில்கள் கொண்டு வந்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதற்கிடையில், மதுபிரியர்கள் சிலர் கடத்தி வந்த மது பாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். அதைத் திருப்பித் தருமாறு கெஞ்சியும் போலீசார் கொடுக்கவில்லை. மாறாக அதை போலீசார் கீழே கொட்டி அழித்ததைக் கண்டு மதுபிரியர்கள் கண்ணீர் வடித்தனர். புதுச்சேரி மது பாட்டில்கள் மீதுள்ள ஆசையால் கடத்தி வரப்பட்ட மதுபானங்கள் இவ்வாறு அழிக்கப்பட்டது மதுபிரியர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Advertisment
Advertisements

செய்தி: பாபு ராஜேந்திரன்

Liquor Shops Villupuram

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: