Advertisment

குவாரி முறைகேடு: அமைச்சர் தந்தையிடம் மீண்டும் விசாரணைக்கு திட்டம்

சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் தந்தையிடம் மீண்டும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக வருமான வரித்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

author-image
manik prabhu
புதுப்பிக்கப்பட்டது
New Update
அமைச்சர் விஜயபாஸ்கர்

அமைச்சர் விஜயபாஸ்கர்

குவாரி முறைகேடு தொடர்பாக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் தந்தையிடம் மீண்டும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக வருமான வரித்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisment

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா காலமானதும் அவரது ஆர்.கே.நகர் தொகுதியும் காலியானது. அந்த தொகுதிக்கு அறிவிக்கப்பட்ட இடைத்தேர்தலில் தினகரன் களமிறங்கினார். தீவிர வாக்கு சேகரிப்பில் அரசியல் கட்சியினர் ஈடுபட்டிருந்த நிலையில், ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்து உத்தரவிட்டது. பணப் பட்டுவாடா புகார் காரணமாக தேர்தல் ஆணையம் இத்தகைய நடவடிக்கையை எடுத்தது.

இதனையடுத்து, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் கீதாலட்சுமி, அதிமுக முன்னாள் எம்பி சிட்லபாக்கம் ராஜேந்திரன் ஆகியோர் வீடுகளில் கடந்த ஏப்ரல் மாதம் வருமான வரித் துறையினர் திடீர் சோதனை நடத்தினர். அதேபோல், புதுக்கோட்டையில் உள்ள அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்கள் என அமைச்சருக்கு சொந்தமான மொத்தம் 35 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

சோதனையின் முடிவில், அமைச்சருக்கு நெருக்கமானவர்கள், உதவியாளர்கள் உள்ளிட்டோரிடம் இருந்து சில கோடிகள் பறிமுதல் செய்யப்பட்டது என்றும், முக்கிய ஆவணங்கள் மற்றும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் போது செய்யப்பட்ட பணப்பட்டுவாடா குறித்த தகவல்கள் சில சிக்கியுள்ளன என்றும் ஊடகங்களில் செய்தி வெளியானது.

அதேபோல், புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள விஜயபாஸ்கரின் தந்தை சின்னசாமி வீட்டில் நடைபெற்ற சோதனையின் முடிவிலும் சில ஆவணங்கள் சிக்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

அதனைத்தொடர்ந்து, மத்திய பொதுப்பணித்துறை அதிகாரிகள் விஜயபாஸ்கரின் தந்தை சின்னதம்பி நடத்தி வந்த குவாரிகளில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, அனுமதிக்கப்பட்ட அளவை விட குவாரிகளில் கூடுதலாக 4 மடங்கு கற்களை வெட்டி எடுத்து பல கோடி ரூபாய் மத்திய அரசுக்கு வருமான இழப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிகிறது.

இதனையடுத்து, வருமானவரித்துறையினர் அனுப்பிய சம்மனை ஏற்று விஜயபாஸ்கரின் தந்தை சின்னத்தம்பி, அதிகாரிகள் முன்னிலையில் நேற்று ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் சுமார் 6 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை மேற்கொண்டனர்.

வருமான வரித்துறை அதிகாரிகளிடம் முக்கிய ஆவணங்கள் சிக்கி உள்ளதால் மீண்டும் ஓரிரு நாளில் சின்னதம்பியிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக வருமான வரித்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

It Raid Vijayabaskar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment