Advertisment

ஜூலை 5ம் தேதி வரை கனமழை: இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் இன்று முதல் 4 நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இன்று 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று கூறப்படுகிறது.

author-image
WebDesk
New Update
கனமழை

கனமழை

தமிழ்நாட்டில்  இன்று முதல் 4 நாட்களுக்கு  பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இன்று 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று கூறப்படுகிறது.

Advertisment

இது தொடர்பாக இந்திய வானிலை  ஆய்வு மையத்தின் தென்மண்டலத் தலைவர் எஸ். பாலச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ” தெற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. மேலும், தமிழ்நாடு நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேகமாறுபாடும்  ஏற்பட்டுள்ளது. இவற்றின் காரணமாக ஜூலை 2, 3, 4  தேதிகளில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களிலும், 3ம் தேதி பெரும்பாலான இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இன்று நீலகிரி,கோவை, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இந்நிலையில் நாளை  திருவள்ளூர், ராணிப்பேட்டை , காஞ்சிபுரம், நீலகிரி, மற்றும் கோவை ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும். திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி,  திருநெல்வேலி, கன்னியாகுமரி, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை மற்றும் புதுச்சேரி ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

தொடர்ந்து ஜூலை 4 நீலகிரி மற்று கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருபத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

5ம் தேதி, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் கனமழை  பெய்ய வாய்ப்புள்ளது.

ஆந்திர கடலோரம்  பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல், தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய குமரிக்கடல், இலங்கை கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று சூறாவளிக் கற்றும் 44 முதல் 55 வேகத்திலு, 65 கிமீ வேகத்திலும் வீசலாம்" என்று செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment