Advertisment

சென்னையில் நாளை கனமழைக்கு வாய்ப்பு: தமிழகத்தில் மழை எப்படி இருக்கும் ?

தமிழகத்தில் படிபடியாக மழையின் அளவு குறையும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
சென்னையில் நாளை கனமழைக்கு வாய்ப்பு: தமிழகத்தில் மழை எப்படி இருக்கும் ?

தமிழகத்தில் படிபடியாக மழையின் அளவு குறையும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.

வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது : ”நாளை தென்கிழக்கு அதனை ஒட்டியுள்ள மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். அடுத்து வரும் 24 மணி நேரம் பொறுத்தவரையில், தமிழகம் புதுவை, காரைக்கால் பகுதியில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கனமழை பொருத்தவரையில், வட கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிதமான மழை மற்றும் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

வடகிழக்கு பருவமழை பொருத்தவரை அக்டோபர் 1 முதல் இன்று வரை தமிழகம் , புதுவை, காரைக்கால் பகுதியில் பதிவான மழையின் அளவு 401 மில்லில் மீட்டர். இது இயல்பாக பெய்யும் மழையின் அளவை போன்றது” என்று அவர் கூறியுள்ளார்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment