தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் தலை விரித்தாடுகிறது. எப்போதும் பெய்யக் கூடிய வட கிழக்கு பருவ மழை இந்த முறை பொய்த்த்து விட்டதால், முன்பு எப்போதையும் விட தண்ணீர் பற்றாக் குறையில் தவிக்கிறார்கள் தமிழக மக்கள்.
இந்நிலையில் தமிழக மக்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் லாரிகள் மூலம் தண்ணீர் சப்ளை செய்கிறார்கள் ரஜினி மக்கள் மன்றத்தினர்.
கடுமையான தண்ணீர் வறட்சியை சந்தித்து வரும் சென்னையில் ஒரு குடம் தண்ணீர் 5 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. குறிப்பாக வட சென்னை, மாதவரம், வடகரை, மணலி ஆகியப் பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு மிக அதிகமாக உள்ளது.
இந்நிலையில், சென்னையில் ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில், புழல் பகுதி மக்களுக்கு இரண்டு லாரிகளில் தினமும் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. இந்த கோடையில் மக்கள் பயன்பெறும் வகையில் தினமும் 60000 லிட்டர் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.