அரசியலில் விஜயகாந்த் பெரிய சக்தி ஆகி இருப்பார்; அந்த பாக்கியத்தை இழந்து விட்டோம்: ரஜினிகாந்த்

விஜயகாந்த் ஆரோக்கியமாக இருந்திருந்தால் மக்களுக்கு அதிக நன்மைகள் செய்திருப்பார் என்றும் அவரது மறைவால் தமிழ் மக்கள் அந்த பாக்கியத்தை இழந்துவிட்டர் என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

விஜயகாந்த் ஆரோக்கியமாக இருந்திருந்தால் மக்களுக்கு அதிக நன்மைகள் செய்திருப்பார் என்றும் அவரது மறைவால் தமிழ் மக்கள் அந்த பாக்கியத்தை இழந்துவிட்டர் என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

author-image
Vasuki Jayasree
New Update
saee
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

விஜயகாந்த் ஆரோக்கியமாக இருந்திருந்தால் மக்களுக்கு அதிக நன்மைகள் செய்திருப்பார் என்றும் அவரது மறைவால் தமிழ் மக்கள் அந்த பாக்கியத்தை இழந்துவிட்டர் என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

Advertisment

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இந்நிலையில் அவரது உடலிக்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தூத்துகுடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், கூறியதாவது : “ விஜயகாந்த் இழந்தது மிகப்பெரிய துரதிஷ்டம். அன்பு நண்பரை இழந்தது மனதிற்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. அசாத்திய மன உறுதியுள்ள மனிதர். அவர் உடல்நலம் தேறி வந்துவிடுவார் என நம்பினோம்.

சமீபத்தில் நடைபெற்ற தே.மு.தி.க பொதுக்குழுவில் சோர்வாக விஜயகாந்தை பார்த்ததும் வருந்தினேன். விஜயகாந்த்  ஆரோக்கியமாக இருந்திருந்தால் தமிழக அரசியலில் மிகப்பெரிய  சக்தியாக  திகழந்திருப்பார். மக்களுக்கு நிறைய நல்லது செய்திருப்பார். தமிழ்நாடு மக்கள் அந்த பாக்கியத்தை இழந்துவிட்டனர் “ என்று தெரிவித்துள்ளார்.

Advertisment
Advertisements

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: