Advertisment

தமிழகத்தில் ராம ராஜ்ய ரத யாத்திரை : மத கலவரத்திற்கு இடம் கொடுக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் ரஜினிகாந்த் அறிவுரை!

மார்ச் 19 தொடங்கி 23 வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
தமிழகத்தில் ராம ராஜ்ய ரத யாத்திரை : மத கலவரத்திற்கு இடம் கொடுக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் ரஜினிகாந்த் அறிவுரை!

விஸ்வ இந்து பரிஷத் சார்பில் ராம ராஜ்ய ரத யாத்திரை அயோத்தியில் துவங்கி 5 மாநிலங்களை கடந்து இன்று(மார்ச் 20) காலை தமிழகம் வந்தது.

Advertisment

விஸ்வ ஹிந்து பரிஷத்தின் "ராமராஜ்ஜிய ரத யாத்திரை"யானது ராம ராஜ்ஜியத்தை மறுநிர்மாணம் செய்தல், ராமர் கோவில் கட்டுதல் உள்ளிட்ட முழக்கங்களை முன் வைத்து கடந்த மாதம் 13-ந் தேதி அயோத்தியில், உத்தரப்பிரதேச முதல்வரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இது இந்தியாவின் பல மாநிலங்களைக் கடந்து  இன்று  தமிழகத்தில்  திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வழியே  ரதயாத்திரையாக  வருகிறது. பின்னர்  எதிர்வரும் 25 ம் தேதி ராமேஸ்வரத்தில் நிறைவடைய  இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் ரத யாத்திரைக்கு புளியரை பகுதியில் பலத்த  வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று தமிழகத்தில் நுழைய இருக்கும் இந்த ராம ராஜ்ய ரத யாத்திரைக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.  திமுக, நாம் தமிழர் கட்சி,  மதிமுக, கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், மனிதநேய ஜனநாயகக் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் தமிழ் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.  புளியரை சோதனைச் சாவடியில் மறியல் போராட்டத்திலும் சிலர் ஈடுப்பட்டு வருகின்றன.

,

 

publive-image

இதனையடுத்து, நெல்லை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி உத்தரவிட்டுள்ளார். மார்ச் 19 தொடங்கி 23 வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்லையில் பாதுகாப்புக்காக 1,500 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். நெல்லை மாவட்டம் முழுவதும் 32 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

,

 

,

 

,

 

,

 

publive-image

தமிழகத்தில் ராம ராஜ்ய ரத யாத்திரை LIVEUPDATES  இதோ:

மாலை 3.00: இமயமலை சென்று சென்னை திரும்பிய ரஜினிகாந்த், ரத யாத்திரை என்பது மத கலவரத்திற்கு இடம் கொடுக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் மத கலவரம் எந்த வடிவில் வந்தாலும் அதனை அரசு தடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்

மதியம் 2.00 : ராமராஜ்ய ரதத்தை பின் தொடர 5 இருசக்கர வாகங்களுக்கு மட்டுமே அனுமதி  நெல்லை எஸ்.பி அறிவிப்பு

மதியம் 1.30: ராம ராஜ்ய ரத யாத்திரையை எதிர்த்து எஸ்டிபி கட்சி மாநில  செயலாளர் அமீர் ஹம்ஸா தலைமையில் சென்னை பாரிமுனையில் சாலை மறியல் போராட்டம் நடைப்பெற்றது.

மதியம் 1.00: ராம ராஜ்ய யாத்திரையை எதிர்த்து  செங்கோட்டையில் போராட்டம் நடத்த சென்ற, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர்  தி.வேல்முருகன் கைது.

மதியம் 12.00:  நெல்லையில் நடைப்பெற்று வரும்  ராம ராஜ்ய ரத யாத்திரையை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்று முழக்கங்களை எழுப்பி, எதிர்க்கட்சிகள் சட்டப்பேரவையில் வெளிநடப்பு செய்தனர்.

காலை 11.30: ராம ரத யாத்திரைக்கு அரசியல் சாயம் பூச வேண்டாம் என்று முதல்வர் பழனிசாமி வேண்டாம் என்று வேண்டுக்கோள்

காலை 10.50: ராம ராஜ்ய யாத்திரை, மக்களை எந்தவிதத்திலும் மாற்றி விடாது. அவர்கள் தெளிவாகவே இருக்கின்றன என்று மீன் வளத்துறை அமைச்சர், ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

காலை 10.30: பக்தியை பயன்படுத்தி தமிழகத்தில் காலூன்றுவதே பாஜக, ஆர்எஸ்எஸ் உள்ளார்ந்த திட்டம் என்று  கி.வீரமணி கருத்து.

காலை 10.00: கோட்டை வாசல் வாஞ்சிநாதன் சிலை அருகே ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுப்பட்ட மனித நேய மக்கள் கட்சி தலைவரி ஜவாஹிருல்லா கைது.  

காலை 9.50:  ராம ராஜ்ய ரத யாத்திரை தமிழகத்தில் மத கலவரத்தை தூண்டுவதற்காகவே நடத்தப்படுகிறது என்று சீமான் கருத்து.

காலை 9.45: சாலை மறியலில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கானோர் கைது.

காலை 9.40: எல்லையான கோட்டைவாசல் வழியாக ரத யாத்திரை தமிழகம் வந்தது.

 

Vhp
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment