தமிழகத்தில் நடைபெற்றுவரும் ஆட்சி இனி நீடிக்கக் கூடாது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
கடலூரில் பா.ம.க சார்பில் மதுக்கடைகள் ஒழிப்பு பாராட்டு விழா கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது: வெள்ளையர்களை எதிர்த்து போராட்டம் மூலமாக சுதந்தைதிரத்தை அடைந்தோம். ஆனால், தற்போது கொள்ளையர்கள் கையில் ஆட்சி மாட்டிக்கொண்டது.
தமிழகத்தில் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள குதிரை பேரம் நடந்துள்ளது. தங்கக் கட்டிகளும், கரண்சிகளும் பரிமாற்றம் செய்யப்பட்டு தற்போது தமிழகத்தில் ஆட்சி நடைபெறுகிறது. இந்த ஆட்சி தமிழகத்தில் இனி நீடிக்கக் கூடாது என்று கூறினார்.