சென்னை, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 2016-ம் ஆண்டு சுவாதி என்ற மென் பொறியாளர் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழக முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக திருநெல்வேலியைச் சேர்ந்த ராம்குமார் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார்.
புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார், அங்கு மின்சார வயரைக் கடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. இதனிடையே ராம்குமார் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் மாநில மனித உரிமைகள் ஆணையம் விசாரணை நடத்தியது.
ராம்குமார் மரணம் தொடர்பாக ஆணையம் பல்வேறு நபர்களிடம் விசாரணை நடத்தியது. இந்த நிலையில் இன்று (அக்டோபர் 31) வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, உயிரிழந்த ராம்குமார் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டது. மேலும், ராம்குமார் மரணம் தொடர்பாக சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil