Advertisment

கோவை நீதிமன்றத்தில் 'சமரசம்' விழிப்புணர்வு நிகழ்ச்சி: அப்படி என்றால் என்ன? இதன் பயன் என்ன?

கோவை நீதிமன்ற வளாகத்தில் சமரசம் விழிப்புணர்வு பலகை திறக்கப்பட்டு, பிரச்சார வாகனம் துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

author-image
WebDesk
New Update
Coimbatore

Coimbatore Court

தமிழ்நாடு மாநில சமரச தீர்வு மையத்தின் அறிவுறுத்தலின் படி, கோவை மாவட்ட சமரச தீர்வு மையம் மற்றும் கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய சமரச தீர்வு தினம் இன்று (ஏப்ரல் 10) கடைபிடிக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சமரசம் விழிப்புணர்வு பலகை திறப்பு நிகழ்ச்சி மற்றும் சமரச விழிப்புணர்வு பிரச்சார வாகனம் துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

Advertisment

இதனை மாவட்ட முதன்மை நீதிபதி ராஜசேகர் துவக்கி வைத்தார். பின்னர் சமரச விழிப்புணர்வு நோட்டீஸ் அனைவருக்கும் வழங்கப்பட்டது. வழக்குகளில் சமரச தீர்வு என்றால் என்ன? இதன் பயன் என்ன? நேரம் மற்றும் நீதிமன்ற கட்டண விரயம் குறித்தும் அனைவருக்கும் விளக்கப்பட்டது.

publive-image

நிலுவையில் உள்ள வழக்குகளை நேரடியாகவோ அல்லது வழக்கறிஞர் மூலமாகவோ மாவட்ட சமரச மையத்திற்கு அனுப்பலாம். இதில் சமரசம் ஏற்படவில்லை என்றால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம். சமரச மையத்தில் காணப்படும் தீர்வே இறுதியானது. இதற்கு மேல் முறையீடு கிடையாது. சமரசம் ஏற்பட்டால் வழக்கின் முழு நீதிமன்றக் கட்டணமும் திரும்ப பெறமுடியும் என விளக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில், மாவட்ட நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.

செய்தி: பி.ரஹ்மான், கோவை

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Coimbatore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment